ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்ஏர்போர்ட், ஏப்.25: திருச்சி விமான நிலைய தேவைக்காக ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மின்சார சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாளை (26ம் தேதி) இதன் துவக்க விழா நடைபெறுகிறது. திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியதிலிருந்து விமான நிலையத்திற்கு விரிவாக்கப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. மற்றொரு புதிய முனையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருகின்றன. இங்கிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்களும், வெளிநாடுகளிலிருந்து விமானங்களும் அதிகளவில் வந்து செல்கின்றன.