துடைப்பத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஒரத்தநாடு, ஏப். 25: ஒரு சமுதாயத்தினரை கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து ஒரத்தநாடு அருகே துடைப்பத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். ஒரு சமுதாயத்தினரை கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி, ஆண்டிநத்தம்காடு, இலந்தைவெட்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் துடைப்பத்துடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: