தஞ்சாவூர், ஏப். 25: நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறையில் 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். உலக திருக்குறள் பேரவை செயலாளர் மாறவர்மன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தமிழ்ப் பல்கலைகழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், உலக தமிழர்களின் இலக்கிய வேடந்தாங்கலாக திகழ்வது தமிழ் பல்கலைக்கழகமாகும். பிற பல்கலைக்கழகங்களுக்கு இல்லாத சிறப்பு தமிழ்மொழியின் பன்முக தன்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் பதிப்புத்துறை மற்றம் அச்சகம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை பதிப்புதுறையின் வழியாக 452 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் விற்பனைகாக தற்போது இருப்பில் உள்ளவை 25 நூல்களாகும்.