தஞ்சை, ஏப்.25: பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் இலைப்பேன் தாக்கு தல் அறிகுறி தென்படுவதால் கட்டுப்படுத்துவது எப்படி? பூச்சியியல் துறை விளக்கம் அளித்துள்ளது.வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர்கள் தெரிவித்ததா வது: அசுவிணியின் தாக்குதலால் இலை ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கீழ் நோக்கிய கிண்ணம் போன்று காணப்படும். இலைப்பேன் தாக்குதலால் இலைகளின் அடிப் பாகத்தில் மிக நுண்ணிய வெண் புள்ளிகளும், சேதம் மிக அதிகமாக உள்ள போது இலைகள் மொர மொரப்பாகவும், மேல் நோக்கி வளைந்தும் காணப்படும்.மக்காச்சோளத்தை பருத்தி வயலை சுற்றி பயிரிடும் பொழுது சாறு உறிஞ்சும் பூச்சி களுக்கு தடுப்புப் பயிராக அமைகிறது. வயல் வரப்புகளில் தட்டை பயரை ஓரப் பயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பொறிவண்டு, கிரைசோபிட் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப் படுகி ன்றன.உதிர்ந்த சப்பைகள், பூக்கள் மற்றும் காய்கள் ஆகியவற்றை கையால் பொ றுக்கி அழிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்க முடியும்.
மஞ்சள் நிறம் பூசப்பட்ட தகர டப்பாவின் மேல் ஆமணக்கு எண்ணெய் அல்லது கிரிஸ் தடவி ஏக்கருக்கு 10என்ற விகிதத்தில் வைத்து வெள்ளை ஈ மற்றும் தத்துப்பூச்சியின் வளர் ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.தாவர பூச்சிக் கொல்லிகளான வேப்ப எண்ணெய் 2சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மிலி அல்லது வேப்பங் கொட்டைக்கரைசல் 5 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மிலி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். - 50 மில்லி, தயாமீத்தாக்சாம் 25 டபிள்யூ.ஜி - 40 கிராம், அசிட்டாமாபிரைட் 20 எஸ்பி.- 40 கிராம், குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. - 500 மி.லி., பிப்ரோனில் 5 எஸ்.சி. - 800 மி.லி., புரபினோபாஸ் 50 ஈசி.- 400மி.லி., டைமெத்தோயேட் 30 ஈ.சி. - 200 மி.லி. ஆகிய ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.