தஞ்சை, ஏப்.25: சித்திரை பட்டத்தில் கம்பு பயிரிடுவதற்கு ஏற்ற ரகங்கள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு விளக்கமளித் துள்ளனர். தமிழ்நாட்டில் கம்பு பயிர் மாசி மற்றும் சித்திரை பட்டத்தில் இறவையிலும், ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்தில் மானாவாரியிலும் பயிரிடப்படுகிறது.இப்பயிருக்கு குறைந்த தண்ணீர் (300-450மில்லி லிட்டர்) போதுமானது. ஆகவே சித்திரை பட்டத் தில் குறைந்த நீரை பயன்படுத்தி கம்பு சாகுபடி செய்யலாம். பட்டம் மற்றும் ரகங்கள்: சித்திரை பட்டம் (மார்ச்-ஏப் பயிரிடுவதற்கு ஏற்ற ரகங்கள் கோ7 ,கோ9, கோ(சியு)9ஜசிஎம்வி 221, த.வே.பவீரிய கம்பு கோ9,கோ10 ஆகும். நாற்ற ங்கால்.ஒருஎக்டேர் நிலத்திற்கு தேவையான நாற்றகளை பெறுவதற்கு 7.5 சென்ட் நாற்றங்கால் போதுமானது. நாற்றங்கால் படுக்கையில் விரல்கள் மூலம் 1 செ.மீ குறைவான ஆழத்தில் சிற்றோடை திறக்க வேண்டும்.
7.5 சென்டில் 3.75 கிலோ விதைகள் தேவை (0.5 கிலோ,சென்ட் )500 கிலோ தொழு உரம் அல்லது மக்கிய உரம் து£வி விதைகளை கைகளால் மிருதுவாக மூட வேண் டும். எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். எக்டருக்கு அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட்டுகள் மற்றும் பாஸ் போபாக்டீரியா 10 பாக்கெட்டுகள் அல்லது அசோபாஸ் 20 பாக்கெட்டுகள், 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.