×

குண்டும் குழியுமாக மாறிய ஆலவயல்- கண்டியாநத்தம் சாலை விரைவில் சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி, ஏப்.25:  பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல்- கண்டியாநத்தம் குண்டும் குழியான சாலையினை சீர்செய்யதற்காக சாலை ஓரங்களில் மண்வெட்டி போட்டு 2 மாதம் ஆகிய பணிகள் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.பொன்னமராவதி அருகே ஆலவயலில் இருந்து கண்டியாநத்தம் வழியாக உலகம்பட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக பல வருடங்களாக உள்ளது. இந்த சாலையினை சீர்செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் இச்சாலைப்பணிக்கு டெண்டர்
விடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பணிகள் ஆரம்பிக்கும் முன் அவசர அவசராக ஆலவயலில் இருந்து கண்டியாநத்தம் வரை சாலையின் இருபுறமும் மண்வெட்டி போட்டனர். குண்டும் குழிமான சாலையினை சீர்செய்து விடுவார்கள் என இப்பகுதி பொதுமக்கள் சந்தோஷப்பட்டனர். ஆனால் 2மாதம் ஆகியும் இந்த சாலைப்பணி எதுவும் நடைபெறவில்லை.  ஏற்கனவே குண்டும் குழியாக இருந்த சாலையில் இப்போது இருபுறமும் மண்வெட்டிப் போட்டுள்ளதால் வாகனங்கள் ஒதுங்கிச் செல்வதற்கு கூட சிரமப்படும் நிலையுள்ளது. எனவே பணிகள் ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகியும்  இந்த சாலைப்பணிகளை விரைந்து முடித்து நல்ல போக்குவரத்துக்குச் சென்று வரும் வகையில் உடனே இந்த சாலைப்பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Alaiyal-Kandiyanamadam ,pit ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...