×

அறந்தாங்கி அருகே பஞ்சர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது

புதுக்கோட்டை, ஏப். 25:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கணபதிபுரத்தை சேர்ந்த லட்சுமிபதி மகன் முருகேசன் (34). இவர் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தினம்தோறும் வீட்டுக்கும் கடைக்கும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து செல்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கடையை அடைத்து விட்டு புறப்பட்ட முருகேசன், வீட்டுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் புறக்கடிகாடு பகுதியில் முருகேசன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முருகேசன் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மதியம் கொலை தொடர்பாக அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் தான் முருகேசனை எதற்காக கொலை செய்தனர். யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளிவரும்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...