இடைப்பாடி புதன் சந்தையில் 84 டன் காய்கறிகள் ₹25 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி, ஏப்.25: இடைப்பாடி புதன் சந்தையில், 84டன் காய்கறிகள், கோழி உள்பட ₹25லட்சத்திற்கு விற்பனையானது.  இடைப்பாடியில் வாரம் தோறும் புதன் கிழமை சந்தை கூடுவது வழக்கம். நேற்று கூடிய சந்தையில், பல்வேறு மாவட்டத்தில் இருந்து, 84டன் காய்கறிகள், 4டன் தர்பூசணி பழங்கள், 1800 சேவல், கோழி விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பீன்ஸ்1 கிலோ ₹80க்கும், கேரட் 1கிலோ ₹40க்கும், பீட்ரூட் கிலோ ₹30க்கும், முள்ளங்கி கிலோ ₹20க்கும், முட்டைகோஸ் ₹22க்கும், உருளை கிழங்கு ₹20க்கும், இஞ்சி கிலோ ₹10க்கும், தக்காளி ₹27கிலோ கொண்ட பெட்டி ₹500 முதல் ₹650க்கும், சின்ன வெங்காயம் கிலோ ₹25முதல் ₹30வரையும் விற்பனை செய்யப்பட்டது. சேவல் ஒன்று ₹300 முதல் ₹800 வரையும், கோழி ஒன்று ₹100 முதல் ₹450வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 84டன் காய்கறி மற்றும் கோழிகள் உள்பட ₹25லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Related Stories: