கெங்கவல்லியில் உரிய ஆவணமில்லாத 5 வாகனங்கள் பறிமுதல்

கெங்கவல்லி, ஏப்.25: கெங்கவல்லியில் உரிய ஆவணமின்றி இயங்கிய 5 வாகனங்களை ஆர்டிஓ பறிமுதல் செய்தார். ஆத்தூர் வட்டார போக்குவரத்து துறை ஆர்டிஓ ஜெயகௌரி தலைமையில், போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் ராமரத்தினம் தலைமையிலான அலுவலர்கள், கெங்கவல்லி- ஆத்தூர் நெடுஞ்சாலையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக போக்குவரத்து விதிகளை மீறி, சரக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வந்தது, உரிய ஆவணம் இல்லாமல் இயக்கியது, பதிவு எண் இல்லாமல் இயக்கியது என 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை கெங்கவல்லி ேபாலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 20 பேருக்கு அபராதம் விதித்தனர்.

Related Stories: