×

தொழிலாளி கொலை மதுரையில் ஒருவர் சரண்

திருப்புவனம், ஏப்.25: திருப்புவனம் அருகே செங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வந்தார். செங்குளத்திற்கு ஓட்டுப்போட வந்த ஆறுமுகம் கடந்த 18ந்தேதி இரவு நெடுங்குளம் ரோட்டில் டூவீலரில் தனது நான்கு வயது மகன் ராஜதுரையுடன் சென்றார். அப்போது மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்டார். முகத்தை வெட்டி சிதைத்த நிலையில் தப்பி ஓடிவிட்டனர். மகன் முன்னிலையிலேயே தந்தை ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்டது. ஆறுமுகத்தின் தந்தை ராஜ சேகர் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டகுற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நெடுங்குளத்தை சேர்ந்த சேவுகசந்திரன் மகன் விஜி என்ற விஜயகுமார்(31) சரணடைந்துள்ளார். மேலும் மூன்று பேரை திருப்புவனம் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...