×

100 லிட்டர் கள் பறிமுதல் 2 பேர் கைது

சாயல்குடி, ஏப். 25: முதுகுளத்தூர் பகுதியில் 100 லிட்டர் பனங் கள்ளை பறிமுதல் செய்து, விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். முதுகுளத்தூர் பகுதியில் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர்கள் பனங் கள் விற்பதாக டிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேரிருவேலி அருகே கண்ணன்கோட்டை கண்மாயில் கள் விற்று கொண்டிருந்த அடஞ்சேரியை சேர்ந்த சக்தி(42) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 70 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இதுபோன்று அச்சங்குளம் கண்மாயில் கள் விற்ற தனிச்சியம் பால்பாண்டி மகன் செந்தில்நாதன்(33) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 30 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்