மதுரை, ஏப். 25: தாதம்பட்டி-சிட்டம்பட்டி இடையே ரிங்ரோடு அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த அம்பிகாபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாதம் பட்டியிலிருந்து சிட்டம்பட்டி வரை ரிங்ரோடு அமைப்பது குறித்து கடந்தாண்டு ஏப்ரலில் மத்திய சாலை போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து நிலங்களை கையகப்படுத்துவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. முல்லைப் பெரியாறு பாசன இருபோக பாசன நிலம், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக சாலை அமைக்க உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.