டி.கல்லுப்பட்டியில் டூவீலர் திருட்டு

பேரையூர், ஏப். 25: டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் செந்திகுமார்(38). இவர் டி.கல்லுப்பட்டி மெயின்சாலையில் கடை வைத்துள்ளார். டி.கல்லுப்பட்டியில் உள்ள இவரது வீட்டிற்கு வெளியே டூவீலரை நிறுத்தி விட்டு கடைக்கு வந்து விட்டார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, டூவீலரைக் காணவில்லை. இதுகுறித்து செந்திகுமார் கொடுத்த புகாரின் பேரில், டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடுபோன டூவீலரை தேடி வருகின்றனர்.

Related Stories: