திருமங்கலம், ஏப்.25: கள்ளிக்குடியில் கடந்த இரண்டு தினங்களாக மழைபெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் திருமங்கலத்தில் வாட்டி எடுக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழைகொட்டி வருகிறது. இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். அத்துடன் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை தீர்வதுடன் கோடைமழை தொடர்ந்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளை இந்த மழை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகிடைக்கும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.