மதுரை, ஏப். 25: மதுரையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட சகோதரர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில், போலீசாரால் தேடப்பட்ட எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்த சின்னபாண்டி(35), அவரது சகோதரர் ராஜபாண்டி(21) ஆகியோர் நேற்று மதுரை ஜேஎம்5 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உமா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.