மேலூர், ஏப். 25: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் அழகேந்திரன்(27). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த சபீக்பைசனாவுடன் டூவீலரில் கொட்டாம்பட்டிக்கு நேற்று வந்தனர். இருவரும் ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வந்தனர். கொட்டாம்பட்டியில் வேலை முடித்து விட்டு டூவீலரில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். மணப்பட்டி அருகே சென்ற போது திருச்சியில் இருந்து மதுரையை நோக்கி சென்ற கார் இவர்களது டூவீலரின் பின்னால் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அழகேந்திரன் பலியானார். படுகாயத்துடன் மதுரை ஜி.ஹெச்சில் சபீக் பைசனா அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்த கொட்டாம்பட்டி போலீசார், கார் டிரைவர் வீரராஜேஷ் கண்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.