நான்கு வழிச்சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதி தொழிலாளி பலி

திருமங்கலம், ஏப்.25: திருமங்கலம் அருகே டிப்பர் லாரி நான்கு வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன்(48). மதுரை முடக்கு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இந்த நிறுவனத்தின் கழிவுகளை டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம், ஆவியூரில் உள்ள மற்றொரு நிறுவன குடோனுக்கு மாரியப்பன் கொண்டு சென்றுள்ளார். அங்கு குப்பை மற்றும் கழிவுகளை இறக்கிவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர். திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் டிப்பர் லாரி நான்கு வழிச்சாலை தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாரியப்பன் உடல் நசுங்கி உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: