பள்ளி ஆண்டு விழா

திருப்பரங்குன்றம்,ஏப்.25: திருப்பரங்குன்றத்தில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 15 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளியின் முதல்வர் ஜெரால்டு ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரும், வித்யாலயா மேலாண்மை குழுவின் தலைவருமான மு.நடராஜன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது. டி.கல்லுப்பட்டி அருகே வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு பேரையூர், ஏப். 24: மதுரை டி.கல்லுப்பட்டி அருகே ரெட்ரப்பட்டி உள்ளது.

இந்த ஊரைச்சேர்ந்தவர் மணியன் மகன் லிங்கம்(39). இவர் குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்று விட்டார். ஒரு மாதம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டை உடைத்து பானை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வி.சத்திரப்பட்டி போலீசில் லிங்கம் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து திருடிச்சென்ற மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

Related Stories: