×

கொடைக்கானல் மேல்மலையில் கோடை நடவு பணி தீவிரம்

கொடைக்கானல், ஏப். 25: தொடர் மழையால் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கோடை நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கோடை நடவு பணியை துவக்கியுள்ளனர். குறிப்பாக மேல்மலை கிராமங்களான வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கியில் பயிர் நடவிற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால் உழவு பணிகள் தீவிமாக நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பீன்ஸ், காரட், உருளை உள்ளிட்டவை பயிரிட உள்ளோம். இந்தாண்டு கோடை மழை ஏப்ரல் மாதத்திலே துவங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் விளைச்சல் மட்டுமின்றி விலையும் நன்றாக கிடைக்கும்’ என்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்