×

பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்

பாவூர்சத்திரம், ஏப்.24: பாவூர்சத்திரம் எம்எஸ்பி வேலாயுத நாடார் லெட்சுமித்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் சங்கர குமார் முன்னிலை வகித்தார். சென்னை ஹாரிஸ் ரீபர் கம்பெனியின் மேலாளர் யூனஸ் ஜமில், வெக்காலிப்பட்டி செயிண்ட் ஜோசப் பள்ளியின் தலைமையாசிரியர் ஹென்றி ராஜ்குமார், இண்டியா சிமெண்ட் கம்பெனியின் சீனியர் மேலாளர் சண்முகராஜ் ஆகியோர் சிவில் இன்ஜினியரிங் படித்த 31  மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றினர்.
 தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர், கல்லூரி துறை தலைவர்கள், வேலைவாய்ப்பு துறை அலுவலர் மணிராஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் ஏஞ்சல் மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Polytechnic College ,
× RELATED ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில்...