குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

அம்பை, ஏப்.24: கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் வேதக்கோயில் தெருவை சேர்ந்தவர் மாசானம் மகன் முத்து பாலன் (14) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறையானதால் முத்துபாலன் தனது தம்பி லெட்சுமணன் நண்பர் ஜோஸ் ஆகியோருடன் ஊரின் அருகே 2 கி.மீ தூரம் உள்ள குரிப்பன்குளத்தில் நேற்று மாலை குளிக்க சென்றார். குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற முத்துபாலன் தண்ணீரில் மூழ்கி இறந்தான். தகவலறிந்து உறவினர்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேரம் தேடி முத்துபாலன் உடலை மீட்டனர். இது குறித்து கல்லிடைக்குறிச்சி எஸ்ஐ பாண்டியன் விசாரித்து வருகிறார்.

Related Stories: