×

கோவில்பட்டியில் இடி மின்னலுடன் கோடை மழை

கோவில்பட்டி, ஏப். 24:  கோவில்பட்டியில் இடி மின்னலுடன் கோடை மழை மீண்டும் பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலை மிஞ்சும் அளவிற்கு கோடை வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பகலில் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. நிலத்தடி நீராதாரம் குறைந்து வந்தது. இந்நிலையில் கோவில்பட்டி மற்றும் நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, மூப்பன்பட்டி, கடலையூர், காமநாயக்கன்பட்டி, துறையூர், ஊத்துப்பட்டி, குருமலை போன்ற பல்வேறு சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோடை மழை பெய்தது. இம்மழை அவ்வப்போது லேசான தூரலுடன் பெய்தது. தற்போது கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இரவு, பகல் நேரங்களில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. நேற்று மதியம் 3.15 மணியளவில் வானில் கருமேக மூட்டம் சூழ்ந்தச நிலையில் அரை மணி நேரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை மீண்டும் பெய்தது. இதனால் மகிழ்–்ச்சியடைந்த மக்கள்,  இதேபோல் தொடர்ந்து கோடை மழை பெய்ய வேண்டும் என வருணபகவானை  வேண்டி வருகின்றனர்.

Tags :
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு