×

மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரும்பாத திட்டங்களை மேற்கொள்ள மாட்டோம்

புதுக்கோட்டை, ஏப். 24:  மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் ஒரு போதும் மேற்கொள்ள மாட்டோம் என தமிழக பாஜ தலைவர் தமிழிசை ெதரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் பொய் பிரசாரம் செய்தாலும் நாட்டு மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவர் மீண்டும் பிரதமராவார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எங்களது கருத்து. ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதோடு அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவேன். தீவிரவாத கலாசாரம் எந்தவிதத்திலும் தூத்துக்குடியில் தலையெடுக்கக் கூடாது.இங்குள்ள இளைஞர்களுக்காக ஏராளமான தொழிற்சாலைகள் ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தூத்துக்குடி மேம்பாட்டுக்கு என்றென்றும் பாடுபடுவேன். மீத்தேன் எரிவாயு திட்டம் உள்ளிட்ட எந்த திட்டம் என்றாலும் மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அத்திட்டத்தை நாங்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம் என்றார். இதே போல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக மக்களின் எதிர்ப்பு குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம்’’ என்றார்.
 முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கு பாஜ மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதில் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பிரபு, இளைஞர் அணி ஒன்றியத் தலைவர் ராஜா, பாரதிய மஸ்தூர் சங்கம் அரசுமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு