தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மே 2 முதல் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி, ஏப். 24:  தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் 2ம்தேதி முதல் நடக்கிறது.  இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட  அரசு இசைப் பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25  வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின்,  மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால்  போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும்.  இப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி  உதவித் தொகை வழங்கப்படும்.அனைத்து மாணவ மாணவியர்களுக்கு அரசு விடுதி  வசதியும் செய்து தரப்படும். வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச  பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.

 3  ஆண்டுகள் பயின்று  அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள்  கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து  தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும்  வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு  பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. திருக்கோவில்களில்  தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று  தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு  அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, கலை ஆர்வமுள்ள மாணவ,  மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும்  விவரங்களை தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, 40 கி, வி.வி.டி சாலை,  டூவிபுரம் 11ம் தெரு, தூத்துக்குடி - 3 என்ற முகவரில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.  மேலும்  9487739296 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு  அதில் தெரிவித்துள்ளா

Related Stories: