×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை சாவில் சந்தேகம்: உறவினர்கள் புகார்

திருச்சி, ஏப்.24:  திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாகரன் மகன் திவாகரன் (22). இவர் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு அந்த பணத்தில் மது அருந்தி ஜாலியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக கோட்டை போலீசார் சில நாட்களுக்கு முன் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் மாம்பழச்சாலை தனியார் தோப்பு ஒன்றில் உள்ள மரத்தில் திவாகரன் தூக்கில் பிணமாக தொங்குவதாக ரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடைய போலீசார் தாக்கியதால் தான் அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.  இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

Tags : Relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...