திருச்சி, ஏப்.24: தேர்தல் விதிமுறையை தளர்த்தி மே தினத்தை தொழிற்சங்கங்கள் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மே தினம் தொழிலாளர் உரிமை திருநாளாகும். 8 மணி வேலை நேரத்தை வலியுறுத்தி போராடி தூக்கு தண்டனை பெற்ற தியாகிகளின் நினைவாக இத்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து மத்திய, மாநில மற்றும் வட்டார தொழிற்சங்கங்களும் ஆண்டுதோறும் மே தினத்தன்று அலுவலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணிபுரியும் இடங்களிலும் தங்களது சங்க ெகாடிகளை ஏற்றியும், சென்னை மே தின பூங்காவில் உள்ள மே தின தியாகிகள் நினைவு சின்னத்துக்கு அஞ்சலி செலுத்தியும், மாலையில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தியும் மே தினத்தை சிறப்பாக ெகாண்டாடுவது வழக்கம்.