×

ரங்கம் ரங்கநாதர் கோயில் ஆண்டாள் யானைக்கு ரூ.1 லட்சத்தில் நெற்றி பட்டம் பக்தர்கள் வழங்கினர்

திருச்சி, ஏப்.24:  ரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நெற்றி பட்டத்தை நேற்று   பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவது ரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். இதனால் பல்வேறு மாவட்டங்கள். மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்வர். மேலும் பக்தர்கள் நம்பெருமாளுக்கான வாகனங்கள், வெள்ளி, தங்க பொருட்களை காணிக்கையாகவும் செலுத்துவர். இதேபோல் ரங்கத்தை சேர்ந்த பக்தர்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான நெற்றி பட்டத்தை கோயில் யானை ஆண்டாளுக்கு காணிக்கையாக நேற்று வழங்கினர். இதனை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோயில் தலைமை அர்ச்சகர், சுந்தர்பட்டர், அறங்காவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி