×

வாழவந்தான்கோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த லோடு ஆட்டோ பறிமுதல் 3 பேருக்கு போலீஸ் வலை

திருவெறும்பூர், ஏப்.24: திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை பகுதியில் லோடு ஆட்டோவில் மணல் கடத்தப்படுவதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் துவாக்குடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது லோடு ஆட்டோவில் மணல் கடத்தி வந்த துவாக்குடி அருகேவுள்ள திருநெடுங்கலம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (35). இவர் லோடு ஆட்டோ உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் நரேஷ் (29), லாரி டிரைவர். இவர்கள் இருவரும் லோடு ஆட்டோவில் திருநெடுங்களம் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்துள்ளனர். துவாக்குடி போலீசாரை கண்டதும் வாழவந்தான்கோட்டை அருகே மணல் ஏற்றி வந்த லோடு ஆட்டோவை விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அப்போது மணல் கடத்தலுக்கு உடந்தையாக அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேசன் (30) என்பவர் பைக்கில் வந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அங்கிருந்து பைக்கை விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.  இச்சம்பவம் குறித்து வாழவந்தான்கோட்டை விஏஓ சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கனிம பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து. லோடு ஆட்டோவையும், பைக்கையும் பறிமுதல் செய்ததோடு தப்பியோடிய சுரேஷ், நரேஷ், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை