×

கோட்டூர் அருகே வேலி தகராறில் முன் விரோதம் வாலிபர் மண்டை உடைப்பு லாரி டிரைவர் கைது

மன்னார்குடி, ஏப். 24: கோட்டூர் அருகே வேலி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபரின் மண்டையை உடைத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருக்களர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபு (35)  கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சங்கர் (39). லாரி டிரைவர். இருவரது வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன. இருவருக்கும் இடையே வேலி அமைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சங்கர் தனது வீட்டில் மராமத்து பணியில் ஈடுப்பட்ட போது சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கோபு வீட்டின் மீது விழுந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் சங்கர் கோபுவை சோடா பாட்டிலால் சரமாரி தாக்கியுள்ளார். மேலும் பாட்டிலால் குத்தியதால் படுகாயமடைந்த கோபு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை தொடர்ந்து சங்கர் தப்பியோடி விட்டார். அருகில் இருந்தவர்கள் கோபுவை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இது குறித்து திருக்களர் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

Tags : dispatcher ,Kotkur ,Veli ,
× RELATED சிகரெட் வாங்கிய பணம் தராத தகராறு...