×

திருத்துறைப்பூண்டியில் ஜாக்டோஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு

திருத்துறைப்பூண்டி, ஏப். 24: திருத்துறைப்பூண்டி வட்டார தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி ஓய்வு பெற்ற சேகல் மடப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன், கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை மனோன்மணி, ஆசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு பாராட்டு விழா, ஜாக்டோஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற பனையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், வேளூர் உதவி பெறும் துவக்கபள்ளி ஆசிரியர்  செல்வகுமார் ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டார ஓய்வு பிரிவு செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் செந்தில் வரவேற்றார். இதில் மாநில தலைவர் நடராஜன், மாநில செயலாளர் தாஸ் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர்கள், மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : fight ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது