×

குழாயில் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை தி.பூண்டி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஏப். 24: குழாயில் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நபர்கள் தங்கள் வீட்டு இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன் தங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் வழக்கும் தொடரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : commissioner ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...