×

திருமயம் அருகே கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு திரளானோர் பங்கேற்பு

திருமயம், ஏப்.24: திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையாணூர் மங்களநாச்சி அம்மன், அடைக்கலங்காத்தார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு துளையாணூர் மங்கள கண்மாய் திடலில் நேற்று காலை 10 மணியளவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருப்பத்தூர்,  திருமயம், காரைக்குடி, கீழாசீவல்பட்டி, கோனாபட்டு, பில்லமங்களம், ராங்கியம், விராச்சிலை, பனையப்பட்டி, குழிபிறை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்நிலையில்  மஞ்சுவிரட்டு திடலில் இருந்து குளையாணூர் கிராம கோயில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து  வெளியூர்களில் இருந்து வந்த காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். அப்போது மஞ்சுவிரட்டு திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக இருந்ததால் அவிழ்க்கப்பட்ட காளைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.இதனை அப்பகுதி இளைஞர்கள் விரட்டிப்பிடிக்க முயன்றனர். இதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில், ஒருசில காளைகளை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். இதனைக்கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்திருந்தனர். அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு திருமயம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

Tags : festival ,temple festival ,Thirumayam ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்