×

அரிமளம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

திருமயம், ஏப்.24: அரிமளம் வன பகுதியில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த மேல்நிலைப்பட்டி வன பகுதியை ஒட்டி அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் உள்ளது. இதனிடையே இறந்து 10 நாட்களுக்கு மேல் இருப்பதாக தெரிகிறது. இதனால் உடல் முழுவதும் அழுகி சிதைந்து காணப்படுகிறது.இறந்த உடல் அருகே இரண்டு பைகளில் பழைய துணிகள் உள்ளது என்றார். இதுபற்றி அரிமளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Women ,valley ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது