பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் அதிரடி கைது

சின்னசேலம், ஏப். 24: சின்னசேலம் அகதிகள் மறுவாழ்வு முகாம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி வாசுகி(24). இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அதே முகாமில் உள்ள கண்ணன் மகன் நந்தன் என்கிற நந்தகுமார்(30) என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக பேசி வந்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் வாசுகி வீட்டில் தனியாக இருந்தபோது நந்தகுமார் வாசுகி வீட்டின் முன்பு நின்று கொண்டு அவரை திட்டி தாக்கி உள்ளார். அப்போது வீட்டின் பின்னால் இருந்த வாசுகியின் கணவர், மாமியார் ஆகியோர் சத்தம் கேட்டு ஓடிவந்து அவரை காப்பாற்றி உள்ளனர். அப்போது நந்தகுமார் வாசுகியை பார்த்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வாசுகி கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து நந்தகுமாரை கைது செய்தனர்.

Related Stories: