×

சங்கராபுரம் பஸ் நிலையத்துக்குள் செல்ல ஆட்டோக்களுக்கு தடை

சங்கராபுரம், ஏப். 24:  சங்கராபுரம் பேருந்து நிலையம் மிகவும் குறுகியதாக உள்ளதால் அங்கு பேருந்துகள் நிற்பதற்கே இட பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயனாளிகளை ஏற்றியும், இறக்கி விடவும் செல்வதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் கூறுகையில், சங்கராபுரம் பேருந்து நிலையம் சிறியதாகும். இந்த பேருந்து நிலையத்திற்குள் ஆட்டோக்கள் செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு பேருந்துகள் செல்ல முடியாமல் தவிக்கின்ற அவல நிலையுள்ளது. இதனால் ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயனாளிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. அப்படி மீறும் ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.

Tags : bus stand ,Sankarapuram ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி