×

கோஷ்டி மோதலில் 6 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர், ஏப். 24: திருக்ேகாவிலூர் அருகே சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகன் சங்கராபுரம் சென்றுவிட்டு ஆறுமுகம் வீட்டு வழியாக தனது வீட்டுக்கு சென்றார். அப்போது ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் முருகன் மனைவி வெண்ணிலாவையும் ஆபாசமாக திட்டி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் ஆறுமுகம், அவரது மகன் வெங்கடேசன், மகள் கலைவாணி, ஏழுமலை மகன் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதேபோல் ஏழுமலை மகன் மணிகண்டனை முருகன் மற்றும் அவரது மனைவி வெண்ணிலா ஆகியோர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் முருகன், வெண்ணிலா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : conflict ,
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...