×

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை, ஏப். 24: உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் சங்கர்(40). இவர் நேற்று காலை இதே கிராமத்தில் உள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு வராததால் உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தபோது சங்கர் வயலில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் சங்கரின் அண்ணன் பன்னீர் கொடுத்துள்ள புகாரில் தனது தம்பி சங்கர் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை