×

விருத்தாசலம் பகுதியில் ஆடுகள் தொடர் திருட்டு

விருத்தாசலம், ஏப். 24: விருத்தாசலம் பகுதியில் ஆடுகள் தொடர்ந்து திருட்டு போன சம்பவத்தில் புதுச்சேரி நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரியகண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் செங்கல்வராயன் (38), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு தனது ஆடுகளை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

காலையில் எழுந்து பார்த்த போது 2 ஆடுகளை காணவில்லை. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (48) என்பவருக்கு சொந்தமான 11 ஆடுகளும் திருட்டு போனது. நாச்சியார்பேட்டையில் பாண்டியன் என்பவரது வீட்டிலும் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து மேற்கண்ட 3 பேரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறும்போது, தினமும் இரவு நேரங்களில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார்கள் இப்பகுதியில் அடிக்கடி வருகின்றன. இங்கு ஆடுகளும் அடிக்கடி திருட்டு போகின்றன. எனவே புதுச்சேரியில் இருந்து வரும் மர்ம நபர்கள் இங்குள்ள ஆடுகளை திருடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் ரோந்துபணியை தீவிரப்படுத்தி ஆடு திருடர்களை பிடித்து கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Theft ,area ,Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு