×

பைக் மீது கார் மோதல் என்எல்சி தொழிலாளி பலி

நெய்வேலி, ஏப். 24: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 27ல் வசித்தவர் கம்பதாசன்(45). இவர் என்எல்சி 2வது நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் இருந்து மனைவி வனிதா, மகன் ஹரிகுமார் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் இந்திரா நகர் சென்றார். அப்போது வட்டம் 16 பிளாக் அருகில் அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கம்பதாசன் இறந்தார். தாய், மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி வடக்குத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : car collision ,NLC ,
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...