×

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

விருத்தாசலம், ஏப். 24: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி மற்றும் போலீசார் பரவலூர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் மனைவி அலமேலு (40) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்ற போது வடக்கு வீரபாண்டியன் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பாலகிருஷ்ணன் (33) என்பவர் ஆயியார் மடத்தெருவில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த போது பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது