×

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் பணம் திருடியவர் அதிரடி கைது

சிதம்பரம், ஏப். 24: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணிடம் பணம் ஜேப்படி செய்த பிக் பாக்கெட் ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே அந்தியூர் மன்மதன் கோயில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் மனைவி தனலட்சுமி (28). இவர் நேற்று முன்தினம் காலை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் புவனகிரி செல்வதற்காக மினிபேருந்தில் ஏறியுள்ளார். அப்போது இவர் வைத்திருந்த கட்டைப் பையில் துணியில் சுற்றி வைத்திருந்த 500 ரூபாயை பின்னால் இருந்த நபர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனலட்சுமி சத்தம் போட்டதால் சக பயணிகள் அந்த நபரை பிடித்து சிதம்பரம் நகர போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் செல்வராஜ் (46) என்பது தெரியவந்தது. நகர போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.500 ஐ பறிமுதல்
செய்தனர்.



Tags : bus stand ,Chidambaram ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை