×

சேலம் கோட்டத்தில் அரசு பஸ்சில் ஓசி பயணம் ; 1,166 பேருக்கு அபராதம்

சேலம், ஏப். 24:  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரியில் அரசு பஸ்களில் அதிகாரிகள் வழித்தட பரிசோதனை செய்து வருகின்றனர். இதில், மார்ச் மாதத்தில் பயணச்சீட்டு எடுக்காதவர்களிடம் இருந்து ₹1.06 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சேலம் மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “அரசு பஸ்களில் வழித்தட பரிசோதனை மற்றும் கூட்டுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன்படி, கடந்த மாதத்தில் 1,166பேரிடம் இருந்து ₹ ஒரு லட்சத்து 06 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது, என்றனர். 

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது