×

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கதேர்தல் நிர்வாகிகள் 5 பேரும் மீண்டும் போட்டி

நாமக்கல், ஏப்.24:  நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. தற்போதைய நிர்வாகிகள் 5 பேரும் ஒரே அணியாக இன்று(24ம்தேதி) மனு தாக்கல் செய்கின்றனர்.நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் தலைவர், துணை தலைவர், செயலாளர். துணை செயலாளர், பொருளாளர் மற்றும் 50 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சங்க அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தேர்தலை நடத்த தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் வாங்கிலி, துணை தலைவர் மணி (எ) சுப்புரத்தினம், செயலாளர் அருள், துணை செயலாளர் மயில்ஆனந்த், பொருளாளர் சீரங்கன் ஆகிய 5 பேரும் மீண்டும் ஒரே அணியில் போட்டியிடுகின்றனர். இவர்களது அணியில் 50 செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள். நேற்று, தலைவர் வாங்கிலி அணியில் போட்டியிடும் அனைவரும் தேர்தல் குழு தலைவர் பொன்னம்பலத்திடம், வேட்பு மனுக்களை தலா ₹5 ஆயிரம் செலுத்தி பெற்று கொண்டனர். தலைவர் வாங்கிலி தலைமையிலான அணியினர் அனைவரும் இன்று (24ம்தேதி) மனு தாக்கல் செய்கின்றனர். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.  இவர்கள் ஓட்டு போட்டு அடுத்த 3 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்கின்றனர். தேர்தல் குழுவில் ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கம், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ நகர் அசோசியேசன் நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளனர்.

Tags : Namakkal ,Sanghandra ,Larry Owners ,executives ,
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்