×

பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

சேந்தமங்கலம், ஏப்.24: நாமக்கல்  பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று சேந்தமங்கலத்திற்கு வந்தது.   பஸ்சில் கண்டக்டர் ராஜேந்திரன் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது,  சேந்தமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்த ரங்கப்பன் என்பவர் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் ஏறினார். அப்போது, கண்டக்டர் ராஜேந்திரன் முன் பகுதியில் பெண்கள் கூட்டமாக  இருப்பதால் பின் பக்கம் ஏறுங்கள் என்று கூறினார். இதை ஏற்க  மறுத்த ரங்கப்பன் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.  அதன் பின்னர், நேற்று காலை  நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு தனியார் பஸ்  வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த ரங்கப்பன், கண்டக்டர்  ராஜேந்திரனிடம் வாக்குவாதம் செய்து, அவரை தாக்கினார். இதனால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ராஜேந்திரன், சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்