×

புதுச்சத்திரம் அருகே 17 வயது சிறுமி கடத்தல்

சேந்தமங்கலம், ஏப்.24: புதுச்சத்திரம் அருகே 17வயது சிறுமியை கடத்திய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (40). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 17 வயது மகள் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென காணவில்லை. மகளை காணாத அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. விசாரித்ததில், கந்தசாமி, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
 இதையடுத்து, புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் இருவரும் எருமப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கந்தசாமியை கைது செய்து, சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags : newborn ,
× RELATED இரவிகுளம் தேசிய பூங்கா நாளை திறப்பு: 108 வரையாடு குட்டிகள் புதுவரவு