×

நாமகிரிப்பேட்டையில் ₹55 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை,  ஏப். 24: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை  வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும்  செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு  நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி,  சீராப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்  விரலி மஞ்சள் 750  மூட்டையும், உருண்டை மஞ்சள்  340 மூட்டை, பனங்காளி மஞ்சள் 130 மூட்டை என  மொத்தம்1,220 மூட்டை மஞ்சளை கொண்டுவந்திருந்தனர். இந்த மஞ்சளை கொள்முதல்  செய்ய ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள்  ஏலத்தை நடத்தினர். இதில், விராலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக  ₹9,529க்கும், குறைந்தபட்சம் ₹6,839க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால்  அதிகபட்சம் ₹7,369க்கும், குறைந்தபட்சம் ₹6,289க்கும், பனங்காளி மஞ்சள்  குவிண்டால் அதிகபட்சம் ₹16,492க்கும், குறைந்தபட்சம் ₹9,292க்கும்  விற்பனையானது.  ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 1,220 மூட்டை மஞ்சள்  ₹55 லட்சத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.   

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு