×

இராமநாதபுரம்புதூர் கருமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தீ மிதித்தனர்

சேந்தமங்கலம், ஏப்.24: சேந்தமங்கலம் அடுத்த இராமநாதபுரம்புதூரில் கருமாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு தீ  குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து  கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர்.  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த  இராமநாதபுரம்புதூரில் கருமாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு மாரியம்மனுக்கு  காப்பு கட்டுதல் மற்றும் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்கள் மோகனூர் காவிரியாற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, கருமாரியம்மனுக்கு திருமஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றை வைத்து அபிஷேகம் நடந்தது. பண்டிகையின் முக்கிய நிகழ்வான தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags : devotees ,Ramanathapuram Ramanathuramurthy Karumariyamman ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...