×

விவசாயி கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது

சேந்தமங்கலம், ஏப்.24: விவசாயி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்புலிநாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ்(42). இவரது உறவினர் பழனிவேல்முருகன்(35), இவரது மனைவி சாந்தி. கனகராஜூக்கும், பழனிவேல் முருகனுக்கும் விவசாய நிலம் தொடர்பாக இருந்த முன்விரோதத்தில், கடந்த 19ம் தேதி இரவு, பழனிவேல்முருகன் வீட்டுக்கு சென்ற கனகராஜ், சாந்தியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரை வெட்டினார். தொடர்ந்து, பழனிவேல்முருகம், கனகராஜை தட்டிக்கேட்டதுடன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.இதுகுறித்து, வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து பழனிவேல்முருகன், அவரது மைத்துனர் வீரபாண்டி(29) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், படுகாயமடைந்த சாந்தி சேலம் தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இக்கொலை சம்பவத்தில், கனகராஜின் மனைவி பூஞ்சோலை(43), அவரது மகன் வல்லரசு(21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கனகராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த, பழனிவேல்முருகனின் சின்ன மாமனார் பரமசிவம் (50) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு