×

அரூரில் காலி பிளவர் விற்பனை அமோகம்

அரூர், ஏப்.24:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, தளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காலிபிளவர் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும், விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மொத்தமாகவும், சில்லறையாகவும் காலிபிளவர் கொள்முதல் செய்யப்பட்டு, வாரச்சந்தைகளிலும், மினிடோர் வாகனங்கள் மூலம் தெரு,தெருவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரூரில் வாரச்சந்தையிலும், சாலையோரங்களிலும் அளவை பொருத்து ஒரு காலிபிளவர் ₹20 முதல் ₹30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா