தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

திருப்பூர், ஏப். 24:   திருப்பூர், இடுவம்பாளையம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (38). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (34). சம்பத்குமார் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் சம்பவத்தன்று சம்பத்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென்று சம்பத்குமார் வீட்டில் வைத்திருந்த மண்ெணண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சம்பத்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: